தனுஷ் தயாரிப்பில் மீண்டும் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Sunday,October 25 2015]

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளியான 'நானும் ரெளடிதான்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு காரணமாக நேற்று இன்றும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் காலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறன. எனவே முதல்நாள் வசூலைவிட அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தனுஷ் தயாரிப்பில் முதன்முதலாக நடித்த விஜய்சேதுபதிக்கு இந்த படம் உண்மையிலேயே ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. எனவே மீண்டும் தனுஷ் படத்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தில் 'எதிர்நீச்சல்' மற்றும் 'காக்கி சட்டை' ஆகிய இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதை அடுத்து தற்போது விஜய்சேதுபதியும் இரண்டாவது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் 'நானும் ரெளடிதான்' படத்தின் இரண்டாம் பாகமா? அல்லது வேறு படமா? என்பது உள்பட இந்த படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

More News

'ரஜினிமுருகன்' பிரச்சனை முடிந்ததால் நிம்மதி அடைந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்திருந்தார்...

விஜய் ரசிகையாக மாறிய ஷாம்லி

கடந்த 1990ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ''அஞ்சலி'' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் நடித்த பேபி ஷாம்லி...

அஜீத் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய மர்ம நபர்கள் மீது புகார்

'வேதாளம்' படத்தின் டப்பிங்கை நேற்று அதிகாலை 4 மணி அளவில் அஜீத் முடித்துவிட்டதாக நேற்று காலை செய்திகள் வெளிவந்த நிலையில்...

'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில்?

கோலிவுட் திரையுலகில் வெற்றி தயாரிப்பாளராக இருப்பவர்களில் ஒருவர் 'அம்மா கிரியேஷன்ஸ்' சிவா என்பது அனைவரும் அறிந்ததே...

நடிகர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்ற நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் முதல் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது....