3 பாகங்களில் தயாராகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: டைட்டில் மாற்றம் என தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,August 11 2021]

விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அனபெல் சுப்பிரமணியம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’அனபெல் சுப்பிரமணியம் என்று இருப்பதை ’அனபெல் சேதுபதி’ என்று மாற்ற படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் உருவாக்க இயக்குனர் திட்டமிட்டு உள்ளதாகவும், அடுத்தடுத்து பாகங்கள் என்பது இந்த படத்தின் கதையுடன் தொடர்ச்சி என்பது மட்டுமின்றி முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் அடுத்தடுத்த பாகங்களிலும் நடிப்பார்கள் என்றும் குறைந்தது மூன்று பாகங்கள் உருவாக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி ஜோடியாக டாப்ஸி நடிக்கும் இந்த திரைப்படத்தை தீபக் சுந்தரராஜன் அவர்கள் இயக்கி வருகிறார் என்பதும், இவர் பிரபல இயக்குனர் சுந்தரராஜனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

என்னை அவர் ஆசிர்வதித்தது நெகிழச்செய்தது: சரத்குமார் பகிர்ந்த புகைப்படம்

வாழ்க்கையில் கடந்து வந்த பாதையின் நிகழ்வுகளை மறக்காமல் நினைவு கொண்டு இருப்பவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்று என்னை அவர் ஆசீர்வதித்து நெகிழச் செய்தது என்று பிரபல நடிகர் சரத்குமார்

நீரஜ் சோப்ரா கொண்டாடப்பட்ட அளவுக்கு இவர் ஏன் கொண்டாடப்படவில்லை?

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ராவை இந்தியாவே கொண்டாடி வருகிறது என்பதும் அவருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்களா? 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, தூத்துக்குடி நகரங்களுக்கு வரப்போகும் கொடிய ஆபத்து… எச்சரிக்கும் நாசா!

பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவது குறித்து உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கால்பந்து கிங் மெஸ்ஸி விளையாடப்போகும் அடுத்த அணி? சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பார்சிலோனா கிளப் அணியில் இருந்து பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சமீபத்தில் விலகினார்.