3 மாதத்தில் 3 படம். உற்சாகத்தில் விஜய்சேதுபதி ரசிகர்கள்

  • IndiaGlitz, [Friday,August 19 2016]
விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் விஜய்சேதுபதி நடித்த 'ரெக்க' திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அவர் நடித்த மற்றுமொரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் தற்போது கிடைத்துள்ளது.
'காக்கா முட்டை' இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகாசிங் நடித்த 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும், இந்த படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.;

ஆகஸ்ட்டில் தர்மதுரை', செப்டம்பரில் 'ஆண்டவன் கட்டளை', அக்டோபரில் 'ரெக்க' என மாதம் ஒரு விஜய்சேதுபதி படம் ரிலீஸ் ஆவதால் அவருடைய ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர்.

More News

நல்ல சினிமாவை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க ஒரு புது முயற்சி

சினிமா என்பது ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், அந்த சினிமாவின் மூலம் சமுதாயத்தில் பல அதிர்வுகள் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்...

சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது...

செப்டம்பரில் கீர்த்திசுரேஷ் வீட்டில் டும்டும் மேளம்

கோலிவுட் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துவிட்ட நடிகை கீர்த்திசுரேஷ்...

அஜித்துக்கு கிடைத்த ஹாலிவுட் பட்டம்

அஜித்துக்கு பட்டம், பதவி, அடைமொழி ஆகியவற்றில் விருப்பம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே...

ஆஸ்திரியாவின் தலைப்பு செய்தியில் 'அஜித் 57'

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரியா நாட்டின் ஊடகம் ஒன்று இந்த படத்தின் செய்திகளை வெளியிட்டுள்ளது...