விஜய்சேதுபதியின் காதலும் முத்தமும்

  • IndiaGlitz, [Friday,March 16 2018]

மக்கள் செல்வன் என்ற பெயருக்கேற்றவாறே விஜய்சேதுபதி தனது ரசிகர்களான மக்கள் மீது மிகுந்த வைத்துள்ளார் என்பது பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ முத்தத்தை அடுத்து ஃபேமஸ் ஆனது விஜய்சேதுபதி தனது ரசிகர்களுக்கு கொடுக்கும் முத்தம்தான். ஒருசில பெரிய நடிகர்கள் ரசிகர்களுடன் கைகொடுத்தாலே கையை சுத்தம் செய்யும் பழக்கத்தை வைத்திருக்கும் நிலையில் விஜய்சேதுபதி தனது ரசிகர்களுக்கு முகம் கோணாமல் கன்னத்தில் முத்தம் கொடுப்பதால்தான் அவர் இன்னும் மக்களின் செல்வனாக உள்ளார்.

விஜய்சேதுபதி தன்னுடைய ரசிகர்களை முத்தமிடும்போது அவர்களுக்கு ஏதாவது நோய் இருக்குமா? அந்த நோயால் தனக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ரசிகர்கள் மீது அந்த அளவுக்கு அவர் அன்பு வைத்துள்ளதால்தான் அவரது ரசிகர்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அன்பு, காதல் இவையே உலகின் சிறந்த மருந்து என்றும், அந்த அன்பை வெளிப்படுத்த முத்தமே சிறந்த வழி என்பதும் விஜய்சேதுபதியின் அசைக்க முடியாத நம்பிக்கை

இதனால்தான் அவரது படங்கள், நடிப்பையும் தாண்டி அவர் லட்சக்கணக்கானவர்களின் மனதில் நிரந்தரமாக குடியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது