'தர்மதுரை' படப்பிடிப்பில் விஜய்சேதுபதி காயம்

  • IndiaGlitz, [Tuesday,February 02 2016]

விஜய்சேதுபதி நடித்த 'காதலும் கடந்து போகும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான 'தர்மதுரை' படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் தேனியில் 'தர்மதுரை' படப்பிடிப்பில் இருந்து விஜய்சேதுபதிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தர்மதுரை' படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் விஜய்சேதுபதி ரவுடிகளுடன் மோதும் காட்சி ஒன்று படமாக்கபட்டது. இந்த படப்பிடிப்பில் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் விஜய்சேதுபதியின் முகத்தில் குத்துவது போன்ற காட்சி ஒன்றை படமாக்கியபோது விஜய்சேதுபதியின் முகத்தில் உண்மையாகவே குத்துவிழுந்தது. இதனால் விஜய்சேதுபதியின் கண் சிவந்து வீங்கியது.

இதனையடுத்து விஜய் சேதுபதி மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இருப்பினும் மறுநாள் விஜய்சேதுபதி வீங்கிய கண்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சீனுராமசாமி இயக்கி வரும் 'தர்மதுரை' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'இது நம்ம ஆளு' டிராக் லிஸ்ட் வெளியீடு

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ள நிலையில்...

'கெத்து' என்பது கன்னட வார்த்தை. நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படத்தின் தலைப்பு தமிழ் வார்த்தை அல்ல என்பதை காரணம் காட்டி தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை மறுக்கப்பட்டதை...

சிம்புவுடன் முதன்முதலாக இணைகிறார் ஸ்ருதிஹாசன்

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'இது நம்ம ஆளு' படத்தின் பாடல்கள் நாளை மறுநாள் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலை உள்ளது...

உலகின் எந்த விருதுக்கும் பரிந்துரைக்கலாம். 'விசாரணை' குறித்து வசந்தபாலன்

தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விசாரணை' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச விருதுகளை பெற்று சிறப்பு பெற்றது...

ஆர்யாவுக்கு இரண்டாவது தோல்வி

ஒருபுறம் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை வென்று சாதானை படைத்து வந்துள்ள நிலையில் ...