விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டு முதல் பத்து திரைப்படங்களில் நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்கள் நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. மேலும் அவர் நடித்து முடித்துள்ள மாமனிதன் உட்பட ஒரு சில படங்கள் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அவருக்கு சுமார் எட்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். அவற்றில் ’கடைசி விவசாயி’, லாபம், க/பெ ரனசிங்கம் ’தளபதி 64’ ஆகிய படங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் வெங்கடகிருஷ்ன ரோஹ்நாத் அவர்களின் இயக்கத்தில் ஒரு படத்தில் உருவாகவுள்ளது என்ற செய்தியை நாம் ஏற்கனவே பார்த்தோம். சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் விஜய்சேதுபதியின் 33 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டைட்டில் இம்மாதம் 31 ஆம் தேதி அதாவது நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரச்சன்னா இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

ரஜினியை திடீரென சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியல் களத்தில் குதிக்க உள்ள நிலையில் அவரை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர் 

ரஜினி-கமல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி குறித்த முக்கிய தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் வரும் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுவதை அடுத்தும், திரையுலகில் கமல்ஹாசன் 60 ஆண்டுகள் பணிபுரிந்ததை அடுத்தும் நவம்பர் 7 முதல் 9 வரை

பெற்றோர்களின் அலட்சியத்தால் மேலும் ஒரு குழந்தை பலி!

ஆழ்துளை கிணற்றை மூடாமல் அலட்சியமாக வைத்திருந்ததால் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவனின் மரணம், டிவி பார்த்து கொண்டிருந்த நேரத்தில் தூத்துகுடியில்

குறைகிறது ஆண்களின் திருமண வயது! இனி பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களின் திருமண வயது 18 என்பதும், ஆண்களின் திருமண வயது 21 என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இருபாலருக்கும் வாக்களிக்க 18 வயது இருந்தால்

தொடர்கதையாகும் பெற்றோர்களின் அலட்சியம்: இன்றும் ஒரு குழந்தை பலி!

ஒரு குழந்தையை 5 வயது வரை வளர்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய கலை ஆகும். ஒரு குழந்தையை பிரசவிக்க பத்து மாதங்கள் மட்டும் போதும். ஆனால் அந்த குழந்தையை பாதுகாப்புடன் வளர்ப்பது