நலிவடைந்த தெருக்கூத்து கலைக்கு பொலிவு தரும் விஜய் சேதுபதி

  • IndiaGlitz, [Friday,December 31 2021]

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலை நலிவடைந்து வரும் நிலையில் அந்த கலைக்கு பொலிவு தரும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி செய்த செயல் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

ஆனால் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகவே தொடர்கிறது. நலிவடைந்து இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான முனைவர் எல். ராமச்சந்திரன் பிரத்யேக முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையையும், அந்த கலையின் தனித்துவமான அடையாளத்தையும் ஆவணப்படுத்தும் வகையில் சர்வதேச தரத்துடன் புகைப்பட கோர்வையை உருவாக்கியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ''தமிழகத்தின் பண்பாட்டு கூறுகளில் ஒன்றான தெருக்கூத்து கலையையும், கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘தெருகூத்துக் கலைஞன்’ என்ற பெயரில் ஒரு உன்னதமான பணியில் ஈடுபட திட்டமிட்டேன். இதுதொடர்பாக எனது இனிய நண்பரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை தொடர்புகொண்டேன். அவர் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி கேட்டறிந்ததும், உடனடியாக என்னுடைய புகைப்பட பாணியிலான கலைப் படைப்பிற்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்தார். அவருக்கு இருக்கும் ஏராளமான பணிச்சுமையில் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சிறிதும் தாமதிக்காமல் நாட்காட்டிக்கான புகைப்பட படப்பிடிப்பிற்கு நேரம் ஒதுக்கினார். அத்துடன் பல மணி நேரம் நீடிக்கக் கூடிய தெருக்கூத்து கலைஞருக்கான ஒப்பனையை பொறுமையுடன் தெருக்கூத்து கலைஞர்களை உடன் வைத்துக்கொண்டு, இந்த கலை படைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினார். தெருக்கூத்து கலைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக நண்பர் விஜயசேதுபதி அளித்த ஊக்குவிப்பு ஒப்புயர்வற்றது. அதனை வார்த்தைகளால் விளக்கிட இயலாது.'' என்றார்.

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தெருக்கூத்து கலைஞனாக தோன்றும் ‘தெருகூத்து கலைஞன்’ என்ற மாதாந்திர நாட்காட்டி இன்று வெளியிடப்பட்டது.

More News

நடிகர் மீது தமிழ் நடிகை போட்ட வழக்கு - நீதிபதி அதிரடி தீர்ப்பு!

தனக்கும் நடிகர் அபி சரவணனுக்கும் இடையே திருமணம் நடக்கவில்லை என்றும் நடிகை மிர்னா மேனன் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நடிகர் அபி சரவணனுக்கு  நியாயமான தீர்ப்பு

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வென்றவர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் நேற்று மூன்று பேர் இருந்த நிலையில்

4 டோஸ் தடுப்பூசி போட்டும் இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளம்பெண் ஒருவருக்கு 4 டோஸ் கொரோனா தடுப்பூசி

சென்னையில் திடீர் மழைக்கு என்ன காரணம்? தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்!

இன்று நண்பகல் முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 100 மி.மீட்டரைத் தாண்டி கனமழை பெய்துவருகிறது. அதிலும் மெரினா

தமிழ் பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது… முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

2021 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் பெண் எழுத்தாளரான