ஜெயம் ரவி படத்தில் நடிக்க 400 ரூபாய் சம்பளம் வாங்கினேன்.. விஜய் சேதுபதி கூறிய ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Monday,September 25 2023]

ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ’ஜெயம்’ என்ற படத்தில் தான் நடித்ததாகவும் அந்த படத்தில் நடிக்க எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாகிய ’இறைவன்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் விழா நேற்று நடைபெற்ற போது அதில் ஜெயம் ரவி உட்பட குழுவினர்கள் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி உள்பட சிலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசிய போது ’இறைவன்’ படத்தின் தலைப்பு தனக்கு பிடித்திருப்பதாகவும் அடுத்த படத்தின் தலைப்பான 'ஜனகணமன’ அதைவிட நன்றாக பிடித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

நான் முதலில் நடித்த படத்திற்கு 250 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள் என்றும் ஜெயம் ரவியின் ’எம் குமரன்’ என்ற படத்தில் நான் ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தேன். அந்த காட்சிக்காக எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார். மேலும் நான் பார்த்து ரசித்த முதல் ஹீரோ ஜெயம் ரவி தான் என்றும் அவர் கூறினார்

இதனை அடுத்து ஜெயம் ரவி பேசியபோது ’நான் ஒருவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நினைத்த ஹீரோ விஜய் சேதுபதி தான் என்றும், உங்களை வைத்து ஒரே ஒரு படமாவது நிச்சயம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை என்றும் தெரிவித்தார்.

மேலும் அன்பு பல பேருக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை, இறைவன் என்றாலே அன்பு தான், 100 பேருக்கு சோறு போட்டு பாருங்கள், சிறிய உதவி செய்து பாருங்கள், உங்களுக்கு இறைவன் தெரிவார். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் ’இறைவன்’ என்று ஜெயம் ரவி கூறினார்.

More News

'லியோ' தயாரிப்பாளர் மிரட்டப்பட்டாரா? சவுக்கு சங்கர் ட்விட்டிற்கு லலித் விளக்கம்..!

'லியோ' தயாரிப்பாளர் திமுக குடும்பத்தினரால் மிரட்டப்பட்டார் என சவுக்கு சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் 'லியோ' படத்தின் தயாரிப்பாளர் லலித் அதனை மறுத்துள்ளார்.

மீனா கைக்கு வந்தது வீட்டுப்பத்திரம்.. விஜயா அதிர்ச்சி.. 'சிறகடிக்க ஆசை'யில் திடீர் திருப்பம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் மிகக் குறைந்த நாட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பது

'வாத்தி' இயக்குனரின் அடுத்த படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று நடந்தது.

ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தின் இன்னொரு டைட்டில்.. புதிய போஸ்டர் ரிலீஸ்..!

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினியை அடுத்து பாபாஜி குகையில் தியானம் செய்த தமிழ் நடிகை. வைரல் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது இமயமலை சென்று பாபாஜி குகையில்  தியானம் செய்வார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் என்பது தெரிந்ததே. இதையடுத்து தற்போது