சக நடிகருக்காக விஜய்சேதுபதி முதன்முதலில் செய்த விஷயம்

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது ரசிகர்களிடமே முத்தம் கொடுத்து நெருக்கமாக இருக்கும் நிலையில் சக நடிகர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருப்பார் என்பதை சொல்லவே தேவையில்லை. இந்த நிலையில் பல படங்களில் நடித்த சக நடிகரான தனக்காக முதன்முதலில் விஜய்சேதுபதி செய்த விஷயம் குறித்து நடிகர் ரமேஷ் திலக் ஆச்சரியத்துடன் கூறியது இதுதான்:

ரமேஷ் திலக்கின் திருமண தினத்தில் விஜய்சேதுபதி ஊரில் இல்லாததால் அவரால் திருமணத்திற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாம். இதை முன்கூட்டியே தெரிவித்துவிட்ட விஜய்சேதுபதி, திருமணம் முடிந்த பின்னர் ஒருநாள் கண்டிப்பாக வீட்டுக்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்திருந்தாராம்

ஆனால் திருமண தினத்தன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியின்போது விஜய்சேதுபதி வருகை தந்துள்ளார். அவர் மட்டுமின்றி அவரது மனைவி, குழந்தைகள், அம்மா, தங்கை என ஒட்டுமொத்த குடும்பமும் வந்திருந்தனர். விஜய்சேதுபதி தனது மொத்த குடும்பத்தினர்களுடனும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றது தனது வரவேற்பு நிகழ்ச்சி மட்டுமே என்பதில் தான் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக ரமேஷ் திலக் கூறியுள்ளார்.