வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன விஜய் சேதுபதி.. ஆனால் இந்த படத்தை அவரால் மறுக்க முடியலையா?

  • IndiaGlitz, [Thursday,February 08 2024]

சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி கூறிய நிலையில் பிரபல நடிகரின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து அந்த படத்தை அவரால் தட்ட முடியாமல் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி கடந்த பல ஆண்டுகளாக ஹீரோவாக நடித்த வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் வில்லனாக நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில், கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தில், விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான ஷாருக்கான் நடித்த ,ஜவான், படத்திலும் வில்லனாக நடித்தார்.

விஜய்சேதுபதி வில்லனாக நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் சுமாரான வெற்றியை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி கூறிய நிலையில் தற்போது அர்ஜுன் நடிக்க உள்ள ’புஷ்பா’ படத்தின் மூன்றாம் பாகத்தில் வில்லனாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்ததுள்ளதாகவும் இந்த படத்தை தட்ட முடியாமல் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

அல்லு அர்ஜுன் நடித்து வரும் ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து ’புஷ்பா’ படத்தின் மூன்றாம் பாகம் தொடங்கப்படும் என்றும் அதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.