அட்மின்தான் காரணம் என்று கூறுவது டிரெண்டாகி விட்டது: '96' பட விழாவில் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

பொதுவெளியில் கத்தி பேசிவிட்டு பின்னர் நான் பேசவில்லை, என்னுடையா அட்மின் தான் காரணம் என்று கூறுவது டிரெண்ட் ஆகிவிட்டதாக நடிகர் விஜய்சேதுபதி இன்று நடைபெற்ற '96' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறினார்.

இன்று சென்னையில் நடந்த '96' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்சேதுபதி, த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது தன்னுடைய வீட்டில் நேற்று ரெய்டு நடந்ததா? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, 'நான் மூன்று வருடங்களாக அட்வான்ஸ் வரி கட்டி வருகிறேன். என்னுடைய கணக்கு சரியாக இருக்கின்றதா? என்று ஆய்வு செய்ய வருமான வரித்துறையினர் வந்தனர். அது ஆய்வு தான், ரெய்டு அல்ல' என்று கூறினார்.

அதேபோல் இன்னொரு கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, 'தற்போது பொதுவெளியில் சத்தமாக கத்திவிட்டு பின்னர், நான் அதை கூறவில்லை, என்னுடைய அட்மின் என்னுடைய கவனத்திற்கு வராமல் பதிவு செய்துவிட்டார்' என்று கூறுவது வாடிக்கையாகிவிட்டது என்று கூறினார்.

More News

இணையத்தில் வைரலாகும் 'சர்கார்' படத்தின் புதிய போஸ்டர்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நேர் வழியா? குறுக்கு வழியா? ஐஸ்வர்யாவை மறைமுகமாக கலாய்த்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் யார் மனதையும் புண்படுத்தாமல் உண்மையாக விளையாடிய ரித்விகாவிற்கு 'பிக்பாஸ் 2' டைட்டில் கிடைக்கவுள்ளது. இந்த டைட்டிலை அடைய

பிக்பாஸ் வீட்டிற்குள் கோப்பையை எடுத்து சென்ற பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடையவுள்ளது. ரித்விகாதான் டைட்டில் வின்னர் என்ற அறிவிப்பை கேட்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளது.

கூவத்தூரில் நடந்ததை கூற தயார்! கருணாஸ் மிரட்டலால் ஆளும்கட்சி அதிர்ச்சியா?

முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை தவறாக பேசியது மற்றும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியது ஆகிய இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட கருணாஸ் இன்று காலை ஜாமீனில் வெளிவந்தார்.

சென்னையில் கேரள போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு

சென்னை விருகம்பாகத்தில் கேரள போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.