சிரஞ்சீவிக்கு வலது கரமாக மாறும் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Saturday,December 30 2017]

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவர் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘சயீரா நரசிம்மரெட்டி'. சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா, ஜெகபதி பாபு, கிச்சா சுதீப் உள்பட பலர் நடிக்கும் பிரமாண்டமான இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

இந்த படத்தில் சிரஞ்சீவி, சயீரா நரசிம்மா ரெட்டி என்ற டைட்டில் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவருக்கு வலது கரமாக படம் முழுவதும் வலம் வரும் 'ஒப்பாயா' என்ற கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கின்றாராம். 'பாகுபலி' படத்தின் கட்டப்பா போன்று இந்த கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தை ராம்சரண் தேஜா தயாரிக்கின்றார். இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.

More News

என் ஆணுறை விளம்பரத்தை பார்த்து அரசு ஏன் பயப்படுகிறது? பிரபல நடிகை கேள்வி

நான் நடித்த ஆணுறை விளம்பரம் பிரபலமான போது மட்டும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரத்தை ஒளிபரப்ப அரசு தடை விதித்துள்ளது.

கடைசி விவசாயிக்கு கை கொடுக்கின்றாரா ரஜினிகாந்த்?

'காக்கா முட்டை' என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன், இரண்டாவதாக இயக்கிய 'ஆண்டவன் கட்டளை' படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியா? ஹர்திக் பட்டேல் அதிரடியால் பரபரப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளிலும்வெற்றி பெற்றனர்.

பத்மாவதி' படத்திற்கு 'யூ/ஏ சான்றிதழ் அளித்து நிபந்தனையும் விதித்த சென்சார் போர்டு

பத்மாவதி' என்ற டைட்டிலை 'பத்மாவத்' என்று மாற்றம் செய்ய வேண்டும் என்றும், 26 இடங்களில் கட் செய்ய வேண்டும் என்றும் தணிக்கை குழுவினர் விதித்த நிபந்தனைகளை

தமிழ்நாட்டை காப்பாற்ற ரஜினியும் தேவை: அன்புமணி

'அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் ரஜினி சீக்கிரம் வந்தால் நல்லது. அவர் அரசியலுக்கு வரவுள்ளதாக நீங்கள் தான் சொல்லி வருகிறீர்கள். முதலில் அவர் சொல்லட்டும்