'தெறி' கிளைமாக்ஸில் அட்லியை அசத்திய விஜய்

  • IndiaGlitz, [Monday,December 21 2015]

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தெறி' படத்தின் கோவா படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விஜய்யுடன் இந்த காட்சியில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டைக்கலைஞர்கள் நடித்து வருகின்றனர். இந்த கிளைமாக்ஸ் காட்சியின் ஒரு பகுதியில் ஒரு பெரிய கிரேனில் தொங்கியபடி விஜய் சண்டைபோடும் காட்சி ஒன்று வருவதாகவும், இந்த ரிஸ்க்கான காட்சியில் விஜய் டூப் இன்றி எவ்வித தயக்கமும் இன்றி நடித்து இயக்குனர் அட்லியை அசத்தியதாக கூறப்படுகிறது.

கிரேன், ஜிம்மி ஜிப்பி போன்ற கருவிகளை வைத்து இந்த சண்டைக்காட்சியை 6 நவீன கேமராக்கள் கொண்டு பல்வேறு கோணங்களில் படமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'தெறி' படம் ரிலீஸாகும்போது இந்த சண்டைக்காட்சி விஜய் ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பாஜிராவ் மஸ்தானி'. திரைவிமர்சனம்

சரித்திர படங்களின் மீது அனைவருக்கும் ஒரு ஆர்வம் வர காரணமாக இருந்த படம் 'பாகுபலி'. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ரசிகர்களுக்கு சரித்திர படங்கள் மீது ஒரு மரியாதை தோன்றிய நிலையில் வந்துள்ள படம்தான் 'பாஜிராவ் மஸ்தானி....

பீப் பாடல் குறித்து நடிகர் சங்கம் கருத்து தெரிவிக்காதது ஏன்? சரத்குமார்

அனிருத் இசையமைத்ததாகவும், சிம்பு பாடியதாகவும் கூறப்படும் பீப் பாடலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வரும் நிலையில் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்....

நாயகனாக அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு 3 ஜோடிகள்

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான நாசரின் மகன் லுத்புதின் பாஷா, ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கிய 'சைவம்' மற்றும் 'இது என்ன மாயம்' ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்....

கெடு முடிந்தது. நாளை ரஜினி வீடு முன் போராட்டம். தமிழர் அமைப்பு அறிவிப்பு

எந்திரன் 2' நாயகி எமிஜாக்சன் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை தடை செய்ய கூறியதால் அவரை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழர் அமைப்பு ஒன்று மூன்று நாள் கெடு கொடுத்து எச்சரிக்கை விடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

பீப் பாடல் எதனால் ஹிட் ஆகிறது- சினேகா

சிம்பு -அனிருத் இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து பிரபல நடிகை சினேகாவும் தனது கருத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்....