'தளபதி 65' படத்தின் செட் போடும் பணியை நிறுத்த சொன்ன விஜய்: என்ன காரணம்?


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் வெளிநாட்டில் உள்ள பிரமாண்டமான மால் ஒன்றின் செட் போடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் திடீரென செட் போடும் பணியை நிறுத்த விஜய் கூறியதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் செட் போடும் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த பணியை உடனடியாக நிறுத்தும்படியும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகு செட் போட்டுக் கொள்ளலாம் என்றும் விஜய் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து மால் செட் போடும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகு இந்த பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் தகவல் கூறப்படுகிறது
தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments