close
Choose your channels

'புலி'க்கு நஷ்ட ஈடு கொடுக்கும் 'போக்கிரி ராஜா'

Thursday, February 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் 'புலி'. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகிஸ்தர்கள் அதே தயாரிப்பாளர் தயாரித்துள்ள 'போக்கிரி ராஜா' படத்திற்கு ரெட் கார்டு போட்டதாக கூறப்பட்டதால் இதுகுறித்து பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றது.


புலி' படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் தற்போது 'போக்கிரி ராஜா' என்ற படத்தையும், அதே படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஷிபுதமீன்ஸ் தற்போது 'இருமுகன்' படத்தையும் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் 'புலி' படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகிஸ்தர்களுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து 30% நஷ்ட ஈடு கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அதில் 'போக்கிரி ராஜா' ரிலீஸுக்கு முன்னர் பாதி தொகையும் மீதி தொகை 'இருமுகன்' படத்தின் ரிலீஸுக்கு முன்னர் அளிக்கப்படும் என்று கூறியதாகவும், இதற்கு விநியோகிஸ்தர் தரப்பில் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இருதரப்பினர்களும் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுவதால் 'போக்கிரி ராஜா' எவ்வித பிரச்சனையும் இன்றி வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.