'வீரம்' படத்திற்கு விஜய் கொடுத்த கமெண்ட். பரதன்

  • IndiaGlitz, [Thursday,October 20 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இயக்குனர் பரதன் இதற்கு முன்னர் விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கியவர் மட்டுமின்றி விஜய் நடித்த 'கில்லி' மற்றும் அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும்
இந்நிலையில் 'பைரவா' படத்தின் கதையை முதன்முதலில் விஜய்யிடம் சொல்ல அவருடைய அலுவலகத்திற்கு சென்றபோது, கில்லி' படப்பிடிப்பின்போது அன்று எப்படிப் பழகினாரோ, அதே மாறாத அன்புடன் தன்னை வரவேற்றதாகவும், அதுமட்டுமின்றி தான் எழுதிய 'வீரம்' பட வசனங்களை சிலாகித்து விஜய் பேசியதாகவும், பரதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் 'பைரவா' படத்தின் கதையை கேட்டதும் உற்சாகமான விஜய், இந்த படத்தை நாம் நிச்சயம் பண்றோம்' என்று எழுந்து நின்று கைகொடுத்ததாகவும், இதன்படி தற்போது படத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் பரதன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.