வீட்டிற்கு கூட செல்லாமல் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்

  • IndiaGlitz, [Monday,August 13 2018]

இளையதளபதி விஜய் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி காலமானார். அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்  அஞ்சலி செலுத்திய நிலையில் அமெரிக்காவில் இருந்ததால் விஜய்யால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இருப்பினும் அவரது சார்பில் அவருடைய மனைவி சங்கீதா கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படப்பிடிப்பு முடித்துவிட்டு    அமெரிக்காவிலிருந்து 22  நேரம் பயணம்  செய்து இன்று அதிகாலை சென்னை வ்ந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக வீட்டிற்கு கூட செல்லாமல் அதிகாலை 4 மணிக்கு   டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சமாதிக்கு சென்று விஜய் அஞ்சலி செலுத்தினார். 

 

More News

தென்னிந்தியாவில் மழை நிலவரம்: வெதர்மேன் கூறும் தகவல்

தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில் கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் கனமழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு அர்ஜூன் ரெட்டி ஹீரோ கொடுத்த நிதி

கேரள மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை சுமார் 37 பேர் பலியாகியுள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் இன்று (12.08 .2018) காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது .

கார் விபத்து எதிரொலி: விக்ரம் மகன் துருவ் கைது

சென்னை தேனாம்பேட்டையில் இன்று அதிகாலை சீயான் விக்ரம் மகன் துருவ் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளானதில் மூன்று ஆட்டோக்கள் சேதம் அடைந்ததுடன் ஒருசிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாவுடன் காதலா? மனம் திறக்கும் ஷாரிக் 

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் யாரும் எதிர்பாராத வகையில் வெளியேறியவர் ஷாரிக். பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் அவர் வெளியேறியதை எதிர்பார்க்கவில்லை.