விஜய் பட நாயகியை தட்டி தூக்கிய சூர்யா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்..!

  • IndiaGlitz, [Friday,May 17 2024]

சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கங்குவா’ படத்தை அடுத்து சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் சூர்யாவின் 44 வது படமாக அமையும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் அந்தமான் தீவில் நடைபெற உள்ளதாக வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி உள்பட நட்சத்திரங்கள் தேர்வு நடந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய்யுடன் ’பீஸ்ட்’ படத்தில் இணைந்து நடித்த பூஜா ஹெக்டே தான் இந்த படத்தின் நாயகி என்று தகவல் கசிந்து உள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்த ‘தக்லைஃப்’ படத்தில் நடித்து வரும் ஜோஜு ஜார்ஜ், ’சூர்யா 44 ’படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது பூஜா ஹெக்டேவும் இணைந்து உள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் நிலையில் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் அந்தமான் தீவில் நடைபெறும் என்றும் அதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

More News

விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து.. முக்கிய அறிவிப்பு..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது 51 வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை நாளை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு நாளை செம விருந்து காத்திருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிட தைரியம் இருக்குன்னா, எதிர்த்து கேட்க தைரியம் வரக்கூடாதா? 'பிடி சார்' டிரைலர்..!

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'பிடி சார்' என்ற திரைப்படம் மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இசைஞானியை சந்தித்த தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ்.. மறைவுக்கு முன் பவதாரிணி செய்த சேவை..

இசைஞானி இளையராஜாவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று சந்தித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் அமைச்சரின் சமூக வலைதள பக்கத்தில்

35 நாட்களில் முடித்துவிட்டேன்.. சந்தோஷமான செய்தி சொன்ன இளையராஜா..!

சைஞானி இளையராஜா இன்று மாலை 6:00 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அவர் அந்த முக்கிய அறிவிப்பு என்ன

மீண்டும் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. என்ன சொல்கிறார்கள்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில்