எனக்கே தெரியாமல் என் படத்தில் ஒரு நிமிட காட்சி: விஜய் மில்டன் அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Friday,August 02 2024]

விஜய் ஆண்டனி நடித்த ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு நிமிட காட்சியை எனக்கே தெரியாமல் இடம் பெற்றுள்ளது என்று அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் வசனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் சற்றுமுன் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த படத்தில் ஒரு நிமிட காட்சி எனக்கே தெரியாமல் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் நாயகன் குறித்த சஸ்பென்சை முதல் பாதி முழுவதும் கொண்டு வந்திருந்தேன் என்றும், சென்னைக்கு வரும் நாயகன் யார்? அவருடைய பின்னணி என்ன? அவனது முகத்தில் உள்ள காயத்திற்கு என்ன காரணம்? என்பது உள்பட பல கேள்விகள் முதல் பாதையில் எழுப்பப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் திடீரென ஒரு நிமிட காட்சி இந்த படத்தில் எனக்கே தெரியாமல் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஒரு நிமிட காட்சியில் இந்த இந்த படத்தின் நாயகன் குறித்து அனைத்து ரகசியங்களும் வெளியாகி உள்ளன என்றும் நான் ரசிகர்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால் அந்த ஒரு நிமிட காட்சியை மறந்து விட்டு படத்தை பாருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குனருக்கே தெரியாமல் ஒரு படத்தை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ஒரு நிமிட காட்சி இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த வீடியோ பரபரப்பாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'கோட்' படத்தில் 'மாநாடு' நடிகை.. வெங்கட்பிரபுவின் ஆஸ்தான நடிகையா?

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகை ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

வயநாடு நிலச்சரிவு: விக்னேஷ் சிவன் - நயன்தாரா கொடுத்த நிவாரண தொகை எவ்வளவு?

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இரவு பகலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக

விஜய், விக்ரம் பட நாயகியை தேர்வு செய்த 'சர்தார் 2' படக்குழு: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கார்த்தி நடித்து வரும் 'சர்தார் 2'படத்தின் நாயகி குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கசிந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ்

திருத்தணி முருகன் கோவிலின் மகிமையைப் பற்றி ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள் பேசுகிறார்!

பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், திருத்தணி முருகன் கோவிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.. நடிகர் விஷால் ட்வீட்..!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில் ராணுவத்தின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது