ஒவ்வொரு மாவட்டத்தில் இரவு பள்ளிக்கூடம்: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,June 22 2023]

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இரவு பாடசாலை திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.

இன்று தளபதி விஜய் பிறந்தநாளை அடுத்து தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் என்று விலையில்லா விருந்தகத்தை தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விரைவில் இரவு பாடசாலை திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி இதன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளே இந்த இரவு பாடசாலையில் பாடங்கள் எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

ஒரு அரசாங்கத்துக்கு இணையாக அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் இரவு பாடசாலை திட்டத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.