சாத்தான்குளம் சம்பவம் போல் எங்களுக்கு நடந்துவிடும்: விஜய் கட்சி தலைவர் மனைவி அச்சம்!

சாத்தான்குளம் தந்தை மகனுக்கு நடந்தது போல் எங்கள் குடும்பத்திற்கும் நடந்து விடுமோ என்ற அச்சம் இருப்பதாக விஜய் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் விஜய் மக்கள் மன்றம் கட்சியை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கினார். இந்த கட்சியின் தலைவர் பத்மநாபன் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் பத்மநாபன் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் புகாரை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பத்மநாபன் திடீரென தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் பத்மநாபன் எங்கே இருக்கிறார் என்பது குறித்து விசாரணை செய்ய அவரது மனைவி, மைத்துனர் மற்றும் மாமனாரை போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் பத்மநாதனின் மனைவியை மட்டும் விடுவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பத்மநாபன் மனைவி வெளியிட்ட வீடியோ ஒன்றில் ’என் கணவர், தம்பி மற்றும் தந்தை மீது எந்தவிதமான வழக்குகளும் இல்லை. ஆனால் திடீரென போலீசார் என் தந்தையையும் தம்பியையும் அடித்து இழுத்துச் சென்றனர். என்னையும் அழைத்துச் சென்றனர். ஆனால் என்னை மட்டும் சிறிய விசாரணைக்கு பின்னர் விடுவித்து விட்டனர்

என் தந்தையும் தம்பியும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நீதிமன்றங்கள் விடுமுறையில் உள்ள நேரத்தில் திட்டமிட்டே இவ்வாறு செய்துள்ளனர். சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை மகனுக்கு நடந்தது போல் எங்கள் குடும்பத்திற்கும் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. எனவே தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் ஆதரவாளர் பத்மநாபனை விஜய் தனது மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிரம்ம முகூர்த்தத்தில் 'ஈஸ்வரன்' டீஸர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சாதித்துக்காட்டிய இளம் நட்சத்திர வீரர்கள்!

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பல சர்ச்சைகள், விமர்சனங்கள் இருந்தாலும்

அடுத்த வார பிக்பாஸ் கேப்டன் இவர்தான்: ஷிவானிக்கு பிரச்சனை வருமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் கேப்டன் யார் என்பதை முடிவு செய்ய ஆஜித், கேப்ரில்லா மற்றும் நிஷா ஆகிய மூவரும் நாமினேட் செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ட்ரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்றால்… மெலானியாவைச் சுற்றும் சில திடுக்கிடும் கேள்விகள்!!!

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ட்ரம்ப் எப்போது ஓய்வு பெறுவார்?  அவரை எப்போது விவாகரத்து செய்யலாம் எனச் சில ஆண்டுகளாகவே மெலனியா ட்ரம்ப் காத்துக் கொண்டிருந்தார்

தாறு மாறா பட்டாசு வெடிப்போரின் கவனத்திற்கு… சென்னை போலீஸ் கமிஷனரின் எச்சரிக்கை!!!

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையோ அல்லது ரூ.1,000 அபராதமோ விதிக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் d