விஜய்யை அடுத்து எஸ்.ஏ.சியை சந்தித்த இன்னொரு பிரபலம்.. முடிவுக்கு வந்ததா பனிப்போர்?

  • IndiaGlitz, [Friday,September 15 2023]

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரை அவருடைய மகனும் நடிகருமான தளபதி விஜய் சமீபத்தில் சந்தித்த நிலையில் தற்போது விஜய்க்கு நெருக்கமான, விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அவர்களும் எஸ்.ஏ.சியை சந்தித்துள்ளார்.

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜய், தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகிய இருவரையும் சந்தித்தார். குறிப்பாக எஸ்ஏசி அவர்களிடம் விஜய் உடல் நலம் விசாரித்ததாக கூறப்பட்டது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகின.

இந்த நிலையில் விஜய்யை அடுத்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த், இன்று எஸ்ஏசியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இதனால் எஸ்ஏசி மற்றும் புஸ்சி ஆனந்த் இடையே பனிப்போர் நீடித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த பனிப்போர் முடிவுக்கு வந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.