விஜய் நடிக்கவில்லை, நடித்தால் என்னிடம் மாட்டியிருப்பார்: விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும்போது விஜய் அவர்கள் தயாரிப்பாளரை கூப்பிட்டு என்னுடைய பெயருடன் விஜய் சேதுபதி பெயரும் வரவேண்டும் என்று அவர் கூறியதாக நான் அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

விஜய் அவர்களை பார்த்து நான் ஒருநாள் நான் கேட்டேன் ’நீங்கள் ஏன் அதிகமாக பேச மாட்டீர்களே ஏன் என்று. அதற்கு அவர் நான் ஒரு நல்ல அப்சர்வர் அதனால் நான் அதிகம் பேசமாட்டேன், பேசுபவர்களை கவனிப்பேன்’ என்று கூறினார்.

நானும் அவரும் சேர்ந்து நடிக்கும் காட்சியில் நான் கொஞ்சம் மிகைப்படுத்தி நடிப்பேன். அப்போது அவர் என்னிடம் உங்களுக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதேபோல் நடியுங்கள் என்று எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ஒரு பெரிய இடத்தில் இருக்கும் ஒருவர் இதுமாதிரி கூறுவது பெரிய மனிதத் தனம் என்று நான் நம்புகிறேன்.

விஜய் அவர்கள் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர். ஒருவர் நல்ல மனிதன் போல் எப்போதும் நடிக்க முடியாது. அப்படி நடித்தால் மாட்டிக்கொள்வார்கள். ஆனால் விஜய் நடிக்கவில்லை. அவர் உண்மையிலேயே நல்ல மனிதர் தான். அவர் வெட்கப்படும்போது மிகவும் அழகாக இருப்பார் என்று விஜய்சேதுபதி பேசினார்.