அறிவிப்புக்கு முன்னரே ரூ.240 கோடி வியாபாரம் செய்ததா 'தளபதி 67? கோலிவுட்டில் பரபரப்பு!

ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கிட்டத்தட்ட வியாபாரம் முடிந்து விடும் என்பது தெரிந்ததே. ஆனால் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையிலேயே அந்த படத்தின் வியாபாரம் சுமார் ரூ.240 கோடிக்கு நடந்துவிட்டதாக வெளிவரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 160 கோடிக்கும், அதேபோல் சேட்டிலைட் உரிமையை சன்டிவி ரூ.80 கோடிக்கும் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இன்னும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், பூஜை கூட போடாத நிலையில், படப்பிடிப்பு தொடங்காத நிலையில் 240 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்திருப்பதாக வெளிவந்த செய்தி கோலிவுட் திரையுலகை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய், சஞ்சய்தத், கௌதம்மேனன், நிவின்பாலி, த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் இந்த படத்தின் அறிவிப்புக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'சூர்யா 42' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டிலா?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மையா? சமந்தா தரப்பினர் விளக்கம்!

 நடிகை சமந்தா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று அதன் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

மீண்டும் மருத்துவமனையில் சமந்தா அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

பிரபல நடிகை சமந்தா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது தெரிந்ததே. அவருக்கு மிகவும் அரிதான மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

திருமணத்தில் கலந்து கொள்ள இவர்களுக்கு மட்டும் தான் அனுமதி: கெளதம் கார்த்திக்

நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் வரும் 28ஆம் தேதி சென்னை அருகே உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற இருப்பதாகவும்

'பத்து தல' படத்தின் முக்கிய அப்டேட் தந்த சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்!

 சிம்பு நடித்துவரும் அடுத்த திரைப்படமான 'பத்து தல' படத்தின் முக்கிய அப்டேட்டை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.