கொரோனா பாதிப்புக்கு பின் 'பிகில்' படத்தை ரீரிலீஸ் செய்யும் 4வது நாடு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது என்பதும் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நாடுகளில் படிப்படியாக திரையரங்குகள் திறக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ரிலீஸ் செய்ய புதிய திரைப்படங்கள் இல்லை என்பதும், அதனால் போதுமான ரசிகர்கள் வராததால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்கும் வகையில் சூப்பர்ஹிட் படங்களை ரீரிலீஸ் செய்யும் திட்டத்தை திரையரங்கு உரிமையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் விஜய்யின் ’பிகில்’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது.

இதனையடுத்து தற்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இலங்கையிலும் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள நிலையில் அங்கும் ‘பிகில்’ திரைப் படத்தை ரீரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில் விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களை வெளியிட்டால் மட்டுமே திரையரங்குகளில் கூட்டம் கூடும் என்பதால் விஜய்யின் பிகில், மெர்சல், சர்க்கார் போன்ற திரைப்படங்களை ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் இன்று அதிகபட்ச பலி எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபோதிலும் கடந்த மாதம் வரை பலி எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால்

மும்பையில் 4 வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்த முதிய பெண்: கொலை செய்த மருமகள்

மும்பையில் ஒரே ஒரு வீடு இருந்தாலே பணக்காரர் என்ற நிலையில் நான்கு வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்து வந்த முதிய பெண் ஒருவரை அவரது மருமகளே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம்

HCL நிறுவனத்தின் தலைவராகும் இந்தியாவின் பணக்காரப் பெண்!!!

HCL நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் ஷிவ் நாடார் வருகிற 17 ஆம் தேதி தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

லட்டு பிடிக்கிறவரையும் இந்த கொரோனா விட்டு வைக்கல… திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட பரபரப்பு!!!

உலகத்துக்கே படியளுக்குற ஏழுமலையான் கோவிலில் தற்போது கொரோனா தாண்டவமாடத் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

டபுள் பவருடன் கொரோனா தடுப்பூசி: கெத்துக் காட்டும் விஞ்ஞானிகள்!!! எப்ப கிடைக்கும் தெரியுமா???

தற்போதைய நிலைமையை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி மட்டுமே இறுதி தீர்வு என ஒட்டுமொத்த உலகமும் நம்பிக் கொண்டிருக்கிறது.