தாயின் வேண்டுகோளை மேடையிலேயே நிறைவேற்றிய விஜய்!

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

தளபதி விஜய் நடித்த ‘’மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இருக்கும் இந்த விழாவில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஜய் முழுக்க முழுக்க இந்த அளவுக்கு உயர்ந்தது அவருடைய உழைப்பால் தான் என்றும் நான் அறிமுகம் செய்து வைத்தாலும் அவருடைய இடைவிடாத உழைப்பு தான் அவருடைய முன்னேற்றத்துக்கு காரணம் என்றும் எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும் விஜய்யிடம் ’நாளைய தீர்ப்பை தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியபோது மேடையே கைதட்டலால் அதிர்ந்தது. நாளைய தீர்ப்பு என்பதை நீங்கள் எதை மனதில் நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் நினைப்பது வேற’ என்று கூறினார்.

மேலும் விஜய்யின் தாயார் ஷோபா பேசியபோது ’விஜய் பாடிய பாடல்களில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ’ஒரு குட்டி ஸ்டோரி’ பாடல் தான் என்றும் கூறினார். மேலும் விஜய்யிடம் தான் ஒரு வேண்டுகோள் வைப்பதாகவும் விஜய் தன்னை கட்டிப் பிடிக்க வேண்டும்’என்றும் கூறினார். இதனை அடுத்து விஜய் மேடைக்கு வந்து தாயையும் தந்தையையும் கட்டிப்பிடித்து தாயின் வேண்டுகோளை மேடையிலேயேநிறைவேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அந்த அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டிய அரங்கத்தையே அதிர வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.