'லியோ' படம் தொடங்கும் முன் 2 நிமிடங்கள் மெளனம் கடைபிடித்த விஜய் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Thursday,October 19 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் புதுக்கோட்டையில் இந்த படத்தின் முதல் காட்சி தொடங்கும் முன் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’லியோ’ . இந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்திற்கு முதல் நாள் முதல் காட்சியை பார்க்க விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிந்தனர்

இந்த நிலையில் புதுக்கோட்டையில் ‘லியோ’ திரைப்படத்தை பார்ப்பதற்கு மேளதாளத்துடன் வந்த ரசிகர்கள் டிக்கெட் எடுத்து திரையரங்குகளுக்கு சென்ற பின்னர் இரண்டு நிமிடங்கள் மௌனம் கடைபிடித்தனர்

இதனை அடுத்து விஜய் மக்கள் இயக்கத்தின் ஒன்றிய தலைவர் சண்முகநாதன் பேசியபோது ’உலக மக்களும் சரி விஜய் மக்கள் இயக்கத்தினரும் சரி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம்.

உலக நாடுகள் உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடக்கும் போரை பேச்சுவார்த்தை நடத்தி நிறுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம், அதற்காகத்தான் இந்த இரண்டு நிமிடம் மௌனம் என்று தெரிவித்தார்.