'பிகில்' ஆடியோ விழாவிற்கு பின் விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்

  • IndiaGlitz, [Thursday,September 26 2019]

சமீபத்தில் நடைபெற்ற ’பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் விஜய் பேசிய ஒரு சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் பேசிய ஒரு விஷயம் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து சமூகத்திற்கு தேவையான முக்கிய விஷயங்களை டிரெண்ட் செய்ய வேண்டும் என்று தனது ரசிகர்களிடம் அந்த விழாவில் பேசும்போது விஜய் கேட்டுக் கொண்டார்.

இதனை அடுத்து அஜித் ரசிகர்களிடம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதி வந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் இந்தப் பேச்சுக்குப் பின்னர் சமூகப் பிரச்சினைகளை குறிப்பிட்டு அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே சுபஸ்ரீ மரணம் குறித்து தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற ஒரு டிரெண்டை ஏற்படுத்தி விஜய் ரசிகர்கள், கீழடி தமிழ் குறித்தும் ஒரு ஹேஷ்டேக்கை பதிவு செய்து அதனை உலக அளவில் டிரெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் தற்போது நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக ஒரு கருத்தை பதிவு செய்து அதையும் இந்திய அளவில் ஏற்படுத்தி வருகின்றனர். நியூட்ரினோ திட்டத்திலிருந்து தேனி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதியையும் காப்பாற்றுங்கள் என விஜய் ரசிகர்கள் பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று விஜய் ரசிகர்களும் மற்ற நடிகர்களும் ரசிகர்களும் சமூக வலைதளத்தை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
 

More News

சீட் பெல்ட் அணியாததால் அபராதம்: இருசக்கர வாகன ஓட்டி அதிர்ச்சி

நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வில்லை என்றும் கூறி, அபராதம் வசூலிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது

ஆன்லைனில் திரையரங்க டிக்கெட்டுக்கள்: அரசே விற்பனை செய்ய ஆலோசனை

திரையரங்க டிக்கெட்டுகள் தற்போது தனியார் நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் அரசே ஆன்லைன் மூலம் திரையரங்க டிக்கெட்டுக்களை விற்பனை

சஞ்சய்தத் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'தல'

சஞ்சய்தத் நடித்த உள்ள பாலிவுட் படம் ஒன்றில் தல தோனி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 

ரஜினியுடன் மோதும் கார்த்தி-விஷால்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நள்ளிரவு பூஜை செய்த சாமியாரும் இளம்பெண்ணும்: சாமியார் மட்டும் மர்ம மரணம்!

திருவள்ளூரில் சாமியார் ஒருவர் இளம்பெண்ணுக்காக நள்ளிரவில் பூஜை செய்து கொண்டிருந்தபோது பூஜையறையில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததால் உடல்கருகி மரணம் அடைந்தார்.