விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக உள்ள வெளிநாட்டு இளம்பெண் யார்? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Tuesday,September 18 2018]

அர்ஜூன் ரெட்டி' என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்று அதற்கு அடுத்த படமான 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் ரூ.100 கிளப்பில் இணைந்த நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது தமிழில் 'நோட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விஜய்யுடன் வெளிநாட்டு இளம்பெண் ஒருவர் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜய் ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலிப்பதாகவும் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் என்றும் வதந்திகள் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

இந்த நிலையில் இந்த புகைப்படங்கள் 'கீதா கோவிந்தம்' படத்திற்காக எடுத்த புகைப்படங்களில் இருந்து மார்பிங் செய்யப்பட்டதாகவும், இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணுக்கும் விஜய்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுளது. குறுகிய காலத்தில் புகழின் உச்சத்தை தொட்ட விஜய்யின் இமேஜை கெடுக்க யாரோ செய்த வேலைதான் இது என்றும் கூறப்படுகிறது.

More News

கமல்ஹாசனின் டைட்டிலை பெற்ற வரலட்சுமி

கோலிவுட் திரையுலகில் தற்போது பிசியான நடிகையாக மட்டுமின்றி ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகையாகவும் இருப்பவர் வரலட்சுமி சரத்குமார்.

பாமகவின் துணைத்தலைவராக பிரபல நடிகர் நியமனம்

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தொடர்ந்து பல ஆண்டுகளாக எதிர்த்து வரும் அரசியல் கட்சியான பாமகவின் துணை தலைவராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் வெங்கட்பிரபு

விஜய் நடித்த 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன், வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த படம் ஒருசில பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நின்றுவிட்டது.

இருப்பதிலேயே ரஜினிதான் பழைய முகம்: ரஞ்சித்துக்கு பிரபல நடிகர் விளக்கம்

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் எஸ்.தாணு தயாரித்த 'கபாலி' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் ராதாரவி நடிப்பதாக இருந்தது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி கூறியதாவது:

இணையத்தில் லீக் ஆன 'விஸ்வாசம்': அதிர்ச்சியில் படக்குழு

தல அஜித் 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.