கேரளா சென்ற விஜய்க்கு நேர்ந்த விபரீதம்.. ரசிகர்களின் அன்புத்தொல்லையால் ஏற்பட்ட சேதம்..!

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக நேற்று விஜய் திருவனந்தபுரம் சென்றார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் திருவனந்தபுரம் சென்ற விஜய்யை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்த நிலையில் சில சேதங்கள் மற்றும் விபரீதங்கள் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்து வரும் போது ’கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் நேற்று விஜய் விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். அவரை விமான நிலையத்தில் வரவேற்க ஏராளமான ரசிகர்கள் கூடியதை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விமான நிலையத்தில் ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்த விஜய் அதன் பின் காரில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றபோது வழிநெடுக ரசிகர்கள் ’தலைவா தலைவா’ என்று கோஷமிட்டு கொண்டே இருந்தனர் என்பதும் ஒரு சிலர் காரின் பின்னாலே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் ரசிகர்கள் விஜய்யின் காரில் சூழ்ந்து கொண்ட நிலையில் திடீரென கார் கண்ணாடி உடைந்ததாகவும் இதனால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிகிறது. அதன்பின் ஒரு வழியாக விஜய்யை பத்திரமாக படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு கொண்டு போய் சேர்ந்தனர்.

விஜய் மீது தமிழக ரசிகர்களை விட வெறித்தனமாக கேரளா ரசிகர்கள் பாசம் வைத்திருப்பதே இந்த விபரீதம் மற்றும் கார் சேதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் இதற்காக எந்தவித வருத்தமும் கொள்ளவில்லை என்றும் ரசிகர்கள் நம் மீது இருக்கும் அன்புக்கு தான் தலை வணங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இன்னும் சில நாட்கள் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நடைபெறும் நிலையில் விஜய் பார்க்க தினமும் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

சூர்யாவின் 'புறநானூறு' படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு.. ரசிகர்கள் அதிருப்தி..!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'புறநானூறு' என்ற படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை பெரும் அதிருப்திக்கு

பெண்ணியம் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல அது ஆண்களுக்கும் உரியது என்பதற்கு தகுந்த விளக்கம் அளித்த எழுத்தாளர் சாலின் மரியா லாரன்ஸ்.

முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி அவர்களுமே சண்டை போட்டு அவமானப்படுத்தப்பட்டு வாங்கி கொடுத்ததே இந்த மருத்துவ கல்வி.எனவே எல்லாமே இங்கு கஷ்டப்பட்டு தான் நாம் அடைந்துள்ளோம்‌.....

மதுரை சித்திரை திருவிழா 2024: பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் 12 நாள் பிரம்மாண்ட விழா

மதுரையின் இதயமாகத் திகழும் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான (2024) திருவிழா அட்டவணையை கோயில் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டது.

கோவிலுக்கு யானை பரிசளித்த தேசிய விருது பெற்ற தமிழ் நடிகை.. அந்த யானையில் ஒரு டிவிஸ்ட்..!

பிரபல தமிழ் நடிகை கேரளா கோவிலுக்கு யானையை பரிசாக அளித்த நிலையில் அந்த யானையில் ஒரு ட்விஸ்ட் இருப்பதை அறிந்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

5 வயதில் பாலியல் தொல்லை.. இன்று அவனுக்கு பெண் குழந்தை இருக்குது: பிரபல நடிகையின் அதிர்ச்சி பதிவு..!

ஐந்து வயதில் தனது உறவினர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தற்போது அவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது என்றும் பிரபல நடிகை ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது