விஜய்யிடம் வாழ்த்து பெற்ற நட்சத்திர ஜோடி

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

பிரபல நடிகர், இயக்குனர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா-அக்சய் திருமணம் நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த திருமணத்தில் கமல்,ரஜினி உள்பட திரையுலக பிரபலங்களும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று கீர்த்தனா, அக்சய் தம்பதிகளை நேரில் சந்தித்து தளபதி விஜய் வாழ்த்து தெரிவித்தார். திருமண தினத்தன்று விஜய்க்கு படப்பிடிப்பு இருந்ததால் அவரால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் நேற்று மணமக்களை அவர்களுடைய இல்லத்திற்கே சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் திருமணத்தில் விஜய்யின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததற்கு பார்த்திபன் மற்றும் மணமக்கள் அவருக்கு நன்றி கூறியுள்ளனர்.

More News

'உன்னை நினைத்து' படத்தை ஞாபகப்படுத்தும் அஸ்வினி-அழகேசன் காதல்

சென்னையில் நேற்று மாலை கல்லூரி மாணவி அஸ்வினி, அழகேசன் என்ற வாலிபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

யுவன்ஷங்கர் ராஜாவின் மறுபக்கம்: மனைவி சொல்லும் ரகசியம்

பொதுவாக திரையுலகில் யுவன்ஷங்கர் ராஜா என்றால் அமைதியானவர், கோபப்படாதவர், ரெக்கார்டிங் போது கூட வேலையில் மட்டும் மும்முரமாக இருப்பவர் என்றுதான் அறியப்பட்டதுண்டு.

'தளபதி 62' படத்தில் வரலட்சுமியின் கேரக்டர் என்ன? புதிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தில் சமிபத்தில் நடிகை வரலட்சுமி இணைந்தார் என்பதை பார்த்தோம்.

அஸ்வினி கொலை செய்யப்பட்டது ஏன்? சினிமாவை மிஞ்சும் திடுக்கிடும் திருப்பம்?

சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள மீனாட்சி கல்லூரி அருகே அக்கல்லூரியில் பிகாம் படித்து வந்த அஸ்வினி என்ற மாணவியை அழகேசன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அனைவரையும்

மகளிர் தினம் கொண்டாட நாம் தகுதியானவர்கள்தானா?

நேற்று உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மூன்று மாத கர்ப்பிணியை காவு கொடுத்துவிட்டு மக்கள் அனைவரும் சோகத்தில் இருந்தனர்.