close
Choose your channels

பிரே பண்ணினேன் கடவுளுக்கு கேட்கல, கம்ப்ளைன்ட் பண்ணினேன் போலீஸ் கண்டுக்கல்ல.. 'மழை பிடிக்காத மனிதன்' டிரைலர்..!

Sunday, June 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யாருக்கும் தெரியாத ஒரு நபராக ஊருக்குள் வரும் விஜய் ஆண்டனியை, எல்லோருக்கும் பிடிக்க ஆனால் அவரது பின்னணி மட்டும் தெரியாமல் இருக்கும் நிலையில் அவர் எதற்காக அந்த ஊருக்கு வந்தார்? அந்த பின்னணி என்ன? மழை பிடிக்காத அந்த மனிதனின் பிரச்சனை என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ் , முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஜூலை மாதம் வெளியாகும் என இந்த ட்ரெய்லரின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் விஜய் மில்டன் படம் என்பதால் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ட்ரெய்லரில் உள்ள சில வசனங்கள் ஏதோ:

இந்த ஊர்ல யாரையும் உனக்கு தெரியாது, உன்னையும் யாருக்கும் தெரிய கூடாது

யாரைப் பற்றி யாருக்குத்தான் முழுசா தெரியும், ஒருத்தரு பத்தி முழுசா தெரிஞ்சுக்கிறது முயற்சியில தானே இந்த உலகமே இயங்கிக்கிட்டு இருக்கு

பிரே பண்ணினேன் கடவுளுக்கு கேட்கல, கம்ப்ளைன்ட் பண்ணினேன் போலீஸ் கண்டுக்கல்ல

அடுத்தவங்களுக்கு நல்லது நினைக்கிற மனசு தான் கடவுள், அப்படி பட்ட மனுஷங்களுக்கு பிரச்சனை வரும்போது பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.