பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் விஜய் ஆண்டனி - 'மூடர்கூடம்' நவீன்

  • IndiaGlitz, [Wednesday,April 18 2018]

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள 'காளி' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை 'மூடர்கூடம்' படத்தை இயக்கிய நவீன் இயக்கவுள்ளார். ஆக்சன் மற்றும் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை கோலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்த டி.சிவா அவர்களின் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படம் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 23வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் தொடங்கவுள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

டி.சிவா, விஜய் ஆண்டனி, நவீன் ஆகிய மூவரும் முதல்முறையாக இணையும் இந்த படம் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு வெற்றிப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

More News

இதுதான் நீங்கள் ஆட்சி செய்ய விரும்பிய நாடா? பிரதமருக்கு வரலட்சுமி கேள்வி

ஆசிபா உள்பட ஒன்றுமறியாத பச்சை குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலையும் செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே உள்ளது.

தமிழக மக்களுக்கு பாராட்டு தெரிவித்த ஸ்ரீரெட்டி

கடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகில் உள்ள முக்கிய புள்ளிகள் நடிகைகளை படுக்கை அழைத்த விவகாரம்

தமிழகத்தில் மெர்க்குரி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மெர்க்குரி திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் வசனமே இல்லாத ஊமைப்படம் என்பதால் இந்த படத்திற்கு மொழி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னத்தில் தட்டிய பெண் நிருபருக்கு கவர்னர் அனுப்பிய கடிதம்

நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அந்த சந்திப்பு முடிந்ததும் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் தட்டி, நீங்கள் என் பேத்தி போல் இருப்பதாக கூறினார். 

தளபதியின்மெர்சலுக்கு கிடைத்த மேலும் ஒரு கெளரவம்

'மெர்சல் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர் உலக சாதனை செய்தது மட்டுமின்றி ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்த படமாகவும் அமைந்தது.