நெய்வேலியில் சத்தமில்லாமல் விஜய் செய்த இன்னொரு விஷயம்!

தளபதி விஜய் நடித்து வந்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் என்பதும் அதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது ஏராளமாக கூடிய ரசிகர்கள் முன் அவர் செல்பி எடுத்துக் கொண்டதும், அந்த செல்பி புகைப்படம் உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து நெய்வேலி என்றாலே விஜய்யின் செல்பி என்று ஞாபகம் வரும் அளவுக்கு அந்த விஷயம் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது. இந்த நிலையில் செல்ஃபியை அடுத்து சத்தமில்லாமல் விஜய் செய்த இன்னொரு விஷயம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த கடைசி நாளில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்த தளத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பை நினைவுகூறும் வகையில் இந்த மரங்கள் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

More News

ஒரே நேரத்தில் அப்பாவாகும் ஒரே இயக்குனரின் ஹீரோக்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியலின் ஹீரோ சஞ்சிவ் மற்றும் இந்த சீரியலில் நாயகி ஆல்யா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஆல்யா கர்ப்பமாகவுள்ளார்.

ரூ.50 கோடி கடன்: பிரபல நடிகரின் தம்பி தற்கொலை

தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் மற்றும் காமெடி நடிகரான ஆனந்தராஜ் சகோதரர் 50 கோடி ரூபாய் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஹுவாயின் புதிய பட்ஜெட் மொபைல்கள்.. அசத்தும் specifications..!

பட்ஜெட் போனில் 10W சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. Huawei P40 Lite E 15,9.81x76.13x8.13மிமீ அளவு மற்றும் வெறும் 176 கிராம் எடை கொண்டதாகும்.

ரஜினியை அடுத்து கமல்ஹாசனை சந்தித்த போராட்டக்கார்ரகள்

சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் முஸ்லிம் அமைப்புகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்கள்

மனிதர்களிடம் இருந்து நாய்களுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ்..! இப்படி நடப்பது இதுதான் முதல் முறை.

நாய்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் முதன் முதலாக மனிதலிருந்து விலங்குகளுக்கு பரவிய வைரஸாகும்.