தெறி: விஜய்க்கு சரிக்கு சமமாக டான்ஸ் ஆடும் எமிஜாக்சன்

  • IndiaGlitz, [Sunday,December 13 2015]

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது. சென்னை, கோவா படப்பிடிப்புகள் திருப்திகரமாக முடிந்திருப்பதாகவும், காட்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் விஜய்யுடன் எமிஜாக்சன் ஆடிப்பாடும் சூப்பர் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய், எமிஜாக்சன் ஆகிய இருவருமே சிறந்த டான்சர்கள் என்பதால் இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் விஜய்க்கு சரிக்கு சமமாக எமிஜாக்சன் டான்ஸில் ஈடுகொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார்,இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

More News

சென்னைக்கு வெள்ள நிவாரண உதவி செய்த கேரள அஜீத் ரசிகர்கள்

கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரண உதவியாக மத்திய, மாநில அரசுகள், தனியார் தொண்டு நிறுவனங்கள்...

அஜித்தின் அடுத்த படத்தில் 'பெங்கால் டைகர்' நடிகர்

கடந்த தீபாவளி தினத்தில் அஜீத் நடித்த 'வேதாளம்' படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் 'வேதாளம்' ரிலீஸுக்கு பின்னர் அஜித்...

'ஈட்டி' வெற்றியை அடுத்து சுறுசுறுப்பாகும் அதர்வாவின் அடுத்த படம்

அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் நேற்று வெளியான 'ஈட்டி' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதர்வாவின் அடுத்த படமான...

சென்னையில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது ஷாருக்கானின் 'தில்வாலே'

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் திரைப்படங்கள் வட இந்தியாவில் மட்டுமின்றி சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆவது வழக்கம்...

வெள்ள நிவாரண நிதி. சமந்தா கொடுத்த ரூ.30 லட்சம்

கடந்த வாரம் சென்னை, கடலூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவிடும் வகையில் கோலிவுட் திரையுலகினர் கொடுத்த நிதியுதவி பலகோடிகளை தாண்டியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்....