பரதன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த விஜய்

  • IndiaGlitz, [Friday,November 27 2015]

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தை 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்குவார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது எஸ்.ஜே.சூர்யா, மோகன் ராஜா, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி உள்பட பல பெரிய இயக்குனர்கள் விஜய்யின் 60வது படத்தை இயக்க காத்திருந்த நிலையில் விஜய் ஏன் பரதனை தேர்வு செய்தார் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.


மேலும் விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்கள் பரதன் பெயரை பரிசீலனை செய்ய சொன்னதாகவும் ஆனால் தனது அடுத்த படத்தை பரதனே இயக்கட்டும் என விஜய் தனது முடிவில் உறுதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பரதன் கூறிய கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், தனக்கு பரதன் மீது நம்பிக்கை இருப்பதாகவும், இந்த படம் தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என விஜய் தனது நட்பு வட்டாரங்களில் நம்பிக்கையுடன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய்யை இந்த அளவுக்கு கவர்ந்த கதை என்னவாக இருக்கும் என்பதை அறிய விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.