விஜய் 59' டப்பிங் பணியில் பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சென்னையில் இதுவரை நடந்த வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டதாகவும், தற்போது ஒருசில நடிகர்களின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்டமாக இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வரும் பிரபல இயக்குனர் மகேந்திரனின் டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 'விஜய் 59 படக்குழுவினர் விரைவில் இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பிற்காக சீனா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. சீனாவில் படப்பிடிப்பு நடைபெறவேண்டிய பகுதிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது.