அஜித் கைவிட்டாலும் கைவிடாத நெருங்கிய நண்பர்... விக்னேஷ் சிவனின் அடுத்த பட ஹீரோ இவர் தான்..!

  • IndiaGlitz, [Thursday,February 16 2023]

அஜித் நடிக்க இருந்த 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் இதனை அடுத்து அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமணி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் படம் கையை விட்டு போனதை அடுத்து விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு ஒரு அதிரடியான ஆக்சன் கதையை விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’நானும் ரவுடிதான்’ மற்றும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி இருவருக்கும் இடையே மிகப் பெரிய நட்பும் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அஜித் படம் கைவிட்டதை அடுத்து தனது நண்பர் விஜய் சேதுபதி கைகொடுத்துள்ளதால் விக்னேஷ் சிவன் உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

கல்யாணத்திற்கு வந்த நடிகை காருக்குள் இருந்த நபருக்கு கொடுத்த லிப்கிஸ்:  வைரல் வீடியோ!

 கல்யாணத்துக்கு வந்த நடிகை காருக்குள் இருந்த நபர் ஒருவருக்கு லிப்கிஸ் கொடுத்த வீடியோ பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

எமோஷனலாக என்னை டச் செய்துவிட்டது: சமீபத்தில் வெளியான படம் குறித்து ராகவா லாரன்ஸ்..!

சமீபத்தில் வெளியான படம் குறித்து நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறிய போது இந்த படம் தன்னை எமோஷனலாக டச் செய்து விட்டது என்றார்.

குடியிருப்பு வளாகத்தில் ஆடையின்றி சுற்றிய இளம்பெண்.. அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தார்..!

மும்பையில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஆடையின்றி இளம் பெண் ஒருவர் இரவில் சுற்றித்திரிந்த விவகாரம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. 

'வாத்தி' படத்திற்கு விறுவிறுப்பாக டிக்கெட் புக் செய்யும் விஜய் ரசிகர்கள்: காரணம் இதுதான்..!

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் நாளை தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் பிரம்மாண்டமான புரமோஷன் படத்தின்

சச்சின் தெண்டுல்கர் - சூர்யா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகர் சூர்யா சந்திப்பு குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.