தொழிலதிபர் ஆகிறாரா விக்னேஷ் சிவன்? அப்ப அடுத்த படம் எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,June 27 2023]

இயக்குனர் விக்னேஷ் சிவன் விரைவில் தொழிலதிபராக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அடுத்த படம் காலதாமதம் ஆகும் என்று தெரிகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதாக இருந்த நிலையில் அந்த படம் திடீரென ட்ராப்பானது. இதனை அடுத்து அவர் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த எந்தவித அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார் என்பதும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் கேரளாவில் விக்னேஷ் சிவன் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய இருப்பதாகவும், ஏற்கனவே கேரளாவில் வாங்கி போட்ட இடத்தில் அப்பார்ட்மெண்ட் கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த பணிகளில் அவர் தீவிரமாக இருப்பதால் அவருடைய அடுத்த படம் காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் தொழிலதிபர் விக்னேஷ் சிவன் ஆக முழுவதும் மாறிவிடுவாரா? அல்லது மீண்டும் சினிமாவுக்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

கார்த்தியின் அடுத்த படத்தில் எம்ஜிஆர் கனெக்சன்.. டைட்டில் என்ன தெரியுமா?

கார்த்தி அடுத்த படத்தில் எம்ஜிஆர் ரசிகராக நடிக்க இருப்பதாகவும் அதனை அடுத்து இந்த படத்தின் டைட்டில் எம்ஜிஆர் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

'ரஞ்சிதமே' பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட சிறுவன்.. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த க்யூட் வீடியோ..!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே' என்ற பாடல் மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில்

குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு விசிட்… இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் வைரல் புகைப்படம்!

இந்திய அளவில் பிரபல இயக்குநராக உருவெடுத்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

முதுகலை பட்டத்துடன் வெளியே வந்த கைதி.. சிவகார்த்திகேயன் அப்பா குறித்த நெகிழ்ச்சியான சம்பவம்..!

 நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா ஜெயில் சூப்ரெண்ட்டாக பணி செய்து கொண்டிருந்த நிலையில் அவர் பணியில் இருந்த போது படிப்பு வாசனையே இல்லாமல் சிறைக்கு வந்த கைதி ஒருவர் வெளியேறும் போது

கன்னட சினிமாவிலும் போதைப்பொருள் சர்ச்சை… மனைவி மீது பிரபல தயாரிப்பாளர் புகார்!

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதைப்பொருள் சர்ச்சை தற்போது பூதாகரமாகி இருக்கும் நிலையில் கன்னட சினிமா துறையில் தயாரிப்பாளராக இருந்துவரும் சந்திரசேகர் என்பவர் தனது மனைவி மீது அடுக்கடுக்கான