மீண்டும் இணையும் 'நானும் ரெளடிதான்' டீம்

  • IndiaGlitz, [Wednesday,September 14 2016]

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரெளடி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் மீண்டும் விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
விக்னேஷ் சிவன் படம் என்றாலே நயன்தாரா மற்றும் அனிருத் ஆகியோர் பணிபுரிய அதிக வாய்ப்பு இருப்பதால் மீண்டும் 'நானும் ரெளடிதான்' டீம் இணையவுள்ளதாகவே கூறப்படுகிறது.