நீ முழுமை அடைந்துவிட்டாய்.. நயனுக்கு விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான வாழ்த்து!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், ‘ நீ இந்த ஆண்டு முழுமை அடைந்து விட்டாய் என நெகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“நான் உன்னுடன் இருக்கும் 9வது பிறந்தநாள் இது. உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு பிறந்த நாளும் எனக்கு ஸ்பெஷலானது, நினைவிற்குரியது மட்டுமல்ல வித்தியாசமானதும் கூட. ஆனால் இந்த பிறந்தநாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இது நாம் இருவரும் கணவன் மனைவியாக, இரண்டு அழகான குழந்தைகளுக்கு அம்மா அப்பாவாகவும், நமது வாழ்க்கையை தொடங்கிய பின்னர் வருகின்ற முதல் பிறந்தநாள்!

மேலும் உன்னை நான் ஒரு வலிமைமிக்க நபராக பார்க்கிறேன்; அப்படித்தான் உன்னை எனக்கு தெரியும். உன்னுடைய வலிமை மற்றும் மன உறுதி , செய்கின்ற வேலைகளில் அர்ப்பணிப்பு குறித்து எனக்கு தெரியும். இந்த பல வருடங்களில் நான் உன்னை வித்தியாசமான ஒரு பெண்ணாக பார்க்கிறேன்.

மேலும் உன்னுடைய நேர்மையையைப் பார்த்து நான் வியக்கிறேன். ஆனால் இன்று உன்னை நான் ஒரு தாயாக பார்க்கையில், இதுவரை நீ அடைந்த உயரங்களில் இதுவே மிகவும் முழுமையான மற்றும் மகிழ்ச்சியான தருணமாக பார்க்கிறேன்.

நீ முழுமை அடைந்து விட்டாய்…. நீ சந்தோஷமாக காணப்படுகிறாய்! நீ அழகாகவும் காணப்படுகிறாய். குழந்தைகள் உன் முகத்தில் முத்தமிடுவதால் நீ இப்போதெல்லாம் மேக்கப் அணிவதில்லை. இவ்வளவு அழகை இத்தனை வருடங்களாக நான் பார்த்ததில்லை. மாறாத சிரிப்பு மற்றும் மகிழ்ச்சி உன்னுடைய முகத்தில் எப்போதும் இருக்கட்டும். இதற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

என் வாழ்க்கை நிறைவடைந்ததாக நான் உணர்கிறேன். வாழ்க்கை மிகவும் அழகாகவும், நிறைவாகவும் காணப்படுகிறது. நமது குழந்தைகளுடன் நாம் இதே போல் சந்தோஷமாக இருக்க நான் வாழ்த்துகிறேன். நாம் அனைவரும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொண்டுள்ளோம். கடவுளின் அருளோடும், பிரபஞ்சத்தின் அறிவோடும், ஒரு அழகான வாழ்க்கையை நாம் உருவாக்குவோம்! என்றென்றும் உன்னை காதலிக்கிறேன்.

More News

'என்னை யாராவது கிள்ளுங்கள்”: லைகா டுவிட்டுக்கு விக்ரம் அளித்த பதில்!

'பொன்னியின் செல்வன்' குறித்து லைகா நிறுவனம் பதிவு செய்த டுவிட்டுக்கு 'என்னை யாராவது கிள்ளி இனி கனவல்ல என்று சொல்லுங்கள் என நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்: நடிகை பார்வதி நாயர் அறிக்கை

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக நடிகை பார்வதி நாயர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 

தம்பி விஜய் போன்ற நடிகர்களுக்கே இந்த நிலையா? பொங்கிய சீமான்

தம்பி விஜய் போன்ற நடிகர்களுக்கு இந்த நிலையா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொங்கி எழுந்து அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லைகா சுபாஷ்கரன் கோரிக்கை: 17 அரசியல் கைதிகளை விடுதலை செய்த அரசு!

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் கோரிக்கையை அடுத்து 17 தமிழ் அரசியல் கைதிகளை இலங்கை அரசு விடுதலை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கதறியழும் ராபர்ட், சோகமாக பார்க்கும் ரக்சிதா.. என்ன நடந்துச்சு பிக்பாஸ் வீட்டில்?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் திடீரென கதறி அழுவதும் அவரை ரக்சிதா சோகமாக பார்க்கும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.