close
Choose your channels

'எல்.ஐ.சி' படத்தில் இருந்து அடுத்தடுத்து விலகிய 2 பிரபலங்கள்? இவருக்கு பதில் இவர் யார்?

Saturday, June 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ’எல்.ஐ.சி’ திரைப்படத்தில் அடுத்தடுத்து இரண்டு பிரபலங்கள் விலகியதை அடுத்து, புதிதாக யார் இணையப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, கவுரி கிஷான், ராதாரவி, உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’எல்.ஐ.சி’. இந்த படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, சிங்கப்பூர் உள்பட பல இடங்களில் நடைபெற்றது என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு முதலில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவர் இந்த படத்தில் இருந்து விலகியதை எடுத்து நீரவ் ஷா ஒளிப்பதிவு பணியை கவனித்ததாக செய்தி வெளியானது. தற்போது அவரும் இந்த படத்தில் இருந்து விலக இருப்பதை அடுத்து விரைவில் வேறொரு பிரபல ஒளிப்பதிவாளர் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும், இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.