வயநாடு நிலச்சரிவு: விக்னேஷ் சிவன் - நயன்தாரா கொடுத்த நிவாரண தொகை எவ்வளவு?

  • IndiaGlitz, [Friday,August 02 2024]

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இரவு பகலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக திரை உலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் இந்த சோக நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் சிலர் நிதி உதவியும் செய்துள்ளனர். விக்ரம் 20 லட்சம், சூர்யா கார்த்தி ஜோதிகா 50 லட்சம் என கேரள மாநிலத்திற்கு நிதி அளித்துள்ள நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து 20 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’வயநாட்டில் ஏற்பட்ட சோகமான நிலச்சரிவை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களது இரங்கல் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். நிலச்சரிவால் ஏற்பட்ட சீரழிவு, இழப்புகள் நெஞ்சை பிசைகின்றன. இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.

ஒற்றுமையின் அடையாளமாக எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, மறு கட்டமைப்பு செயல்பாட்டில் உதவ, கேரள மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை தருகிறோம்.

நமது அரசாங்கம், தன்னார்வ தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகள் ஒருங்கிணைந்து மீட்பு பணியை செய்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

விஜய், விக்ரம் பட நாயகியை தேர்வு செய்த 'சர்தார் 2' படக்குழு: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கார்த்தி நடித்து வரும் 'சர்தார் 2'படத்தின் நாயகி குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கசிந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ்

திருத்தணி முருகன் கோவிலின் மகிமையைப் பற்றி ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள் பேசுகிறார்!

பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், திருத்தணி முருகன் கோவிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.. நடிகர் விஷால் ட்வீட்..!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில் ராணுவத்தின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது

எதிர்பார்த்த அதே பாட்டு தான்.. 'கோட்' 3வது சிங்கிள் தகவல்..!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில்

'கோட்' டிரைலர் ரிலீஸ் எப்போது? முதன்முறையாக தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் டிரைலர் எப்போது என நமக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் தெரிவித்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்