நடிகை சமந்தாவிற்கு நயன்தாரா படக்குழு கொடுத்த அசத்தலான சர்பரைஸ்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் “தி பேமிலி மேன் 2” வெப்சீரிஸ் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சில எதிர்மறையான விமர்சனங்கள் இந்த வெப்சீரிஸ் மீது வைக்கப்பட்டு இருந்தாலும் இதில் நடிகை சமந்தாவின் நடிப்பு குறித்து ரசிகர்கள் பிரமித்து கருத்து வெளியிட்டு இருந்தனர்.

இந்த வெப்சீரிஸில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது நடிகை சமந்தாவிற்கு கிடைத்துள்ளது. கொரோனா காரணமாக 2021 மெல்போர்ன் திரைப்பட விழா ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டது.

இதில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற நடிகை சமந்தாவிற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சமந்தா ஆகியோர்  நடிப்பில் உருவாகி வரும் “காத்து வாக்குல ரெண்டு காதல்“ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக புதுச்சேரி அருகே நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பின்போது நடிகை சமந்தாவின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நயன்தாரா மற்றும் நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கேக் வெட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

மேலும் இதே 2021 மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப்போற்று” திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் எனும் இரண்டு விருதுகள் கிடைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.