கொரோனா பரப்பியதாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை?

உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஓயாத நிலையில் சில நாடுகள் இன்னும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வெறும் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்றை வைத்திருந்த வியட்நாம் தற்போது கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கையை 4.80 லட்சம் ஆக அதிகப்படுத்தி உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமில் கடந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா பரவல் ஆரம்பித்த போதே அரசு தீவிரமாகச் செயல்பட்டு கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இதனால் ஆண்டு முழுவதும் பெரிய எண்ணிக்கையில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. கடந்த ஏப்ரல் வரை இந்த பரவல் எண்ணிக்கை ஒரு சில ஆயிரங்களில்தான் இருந்துள்ளது. ஆனால் தற்போது கட்டுப்பாடுகளை மதிக்காமல் மக்கள் செயல்படுவதால் 4.80 லட்சமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் ஹோ சி மின் நகரத்தில் இருந்து கா மவ் நகரத்துக்கு வந்த லீ வான் ட்ரை (28) எனும் இளைஞர் இடம்பெயர்ந்த பிறகும் 21 நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஊர் முழுவதும் சுற்றித் திரிந்துள்ளார். இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்காமல் இருந்த குற்றத்திற்காக அந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல கொரோனா விதிமுறைகளை மீறிய 2 பேருக்கு தலா 18 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 2 ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா விதிமுறைகளை மீறும் பொதுமக்கள் மீது அரசாங்கம் வெறுமனே அபராதம் விதிக்கும் நடைமுறையைத்தான் இதுவரை பின்பற்றி வருகின்றன. சில நேரங்களில் வழக்குப் பதிவும் செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில் கொரோனா விதிமுறைகளை மதிக்காமல் இருந்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

காதலியின் காதில் செக்ஸ் வைத்துக்கொண்ட காதலன்… வந்த விளைவு?

ஆபாசப்படம் பார்க்கும் பழக்கம் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் இளைஞர்கள் பலர், வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு விபரீதத்தில்

நுகர்ந்தாலே போதும்… மதுப்பிரியர்களை குஷிபடுத்தும் புது வரவு!

மது வகைகளில் எவ்வளவோ புதுப்புது வரவுகள் வந்துவிட்டன. ஆனாலும் நீராவியை உறிஞ்சுவது போன்று மதுப்புகையை உறிஞ்சியே போதையேற்றிக் கொள்ளும்

நீர்ச்சருக்கு விளையாட்டில் தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் நடிகைகள் சிலர் நடிப்பு மட்டுமின்றி பிற கலைகளையும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர் என்பது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்தோம். குறிப்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் ரேஸ் கார்

ஆக்சன் கிங் அர்ஜூன் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகையா?

கடந்த 1980ஆம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக நடித்து வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் தற்போது லாஸ்லியா நடித்துவரும் 'பிரண்ட்ஷிப்' மற்றும் 'மேதாவி'

காதலியை கரம்பிடிக்கும் விஜய், அஜித், சூர்யா பட நடிகர்!

விஜய், அஜித், சூர்யாவுடன் நடித்த நடிகர் ஒருவர் தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார் என்றும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.