பாலிவுட் தமிழ்ப்பெண்ணிடம் பாராட்டு பெற்ற ஜோதிகா

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

நாச்சியார்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ஜோதிகா, 'துமாரி சுலு' என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை இயக்குனர் ராதாமோகன் நடிக்கவுள்ளார் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம். (https://www.indiaglitz.com/jyotika-acts-vidya-balan-in-tumhari-sulu-remake-tamilfont-news-207133). இந்த செய்தியை தற்போது படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

இந்தியில் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த துமாரி சுலு படத்தின் ரீமேக்கில் வித்யாபாலன் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடிக்கின்றார். ஒரு குடும்பத்தலைவி இரவு நேர வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்ததால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பத்தை நகைச்சுவையுடன் இந்த படத்தில் கூறப்படவுள்ளது. பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டாகி வித்யாபாலனுக்கு பல விருதுகளை பெற்று தந்த இந்த படம் தமிழிலும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் ராதாமோகன் கூறியபோது, 'மொழி' படத்திற்கு பின் ஜோதிகாவுடன் மீண்டும் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி. இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பு, இந்தியை போலவே மிகச்சிறப்பாக அமையும் என நம்புகிறேன்.

இந்த படம் குறித்து ஜோதிகா கூறியபோது, 'வித்யாபாலனின் தீவிர ரசிகையாகிய நான், அவர் நடித்த எந்தபடத்தையும் தவற விடுவதில்லை. அவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமான 'துமாரி சுலு' படத்தில் அவர் நடித்த கேரக்டரில் நடிப்பதில் எனக்கு பெருமையே

நடிகை வித்யாபாலன் கூறியபோது, 'ஒரு தமிழ்ப்பெண் என்ற முறையில் எங்களது படம் தமிழ் மொழியில் தயாராவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழ் ரசிகர்களின் அன்பை பரப்பவிருக்கும் ஜோதிகாவுக்கு என் வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்

ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

More News

டி.ராஜேந்தரின் முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளுக்கு ஒரு கட்சி என்ற விகிதத்தில் அரசியல் கட்சிகள் பெருகி கொண்டே போகும் நிலையில் இன்று மேலும் ஒரு புதிய கட்சி உதயமாகியுள்ளது.

ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கைது செய்யப்பட்டபோதே தமிழகத்தில் அடுத்த கைது ப.சிதம்பரம் தான் என்று பேட்டி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்திருந்தார்.

கார்த்திக் சிதம்பரம் அதிரடி கைது: அவசரமாக இந்தியா திரும்புகிறார் சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்லின் மகன் கார்த்திக் சிதம்பரம் சற்றுமுன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.

காஞ்சி சங்கராச்சாரியார் என்று அழைக்கப்படும் ஜெயெந்திர சரஸ்வதி அவர்கள் சற்றுமுன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

'சூர்யா 36' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எஸ்.ஆர்.பிரபு

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில் அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.