3 நாடுகளில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. பக்கா பிளானுடன் களமிறங்கும் மகிழ் திருமேனி..!

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

அஜித் நடிக்க இருக்கும் ‘விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பை லைகா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்தி வராததால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

ஆனால் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன், ‘விடாமுயற்சி’ திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் எங்கள் பெருமைக்குரிய தயாரிப்பு என்று தெரிவித்தார்.

மேலும் செப்டம்பர் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை மூன்று நாடுகளில் நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 60% படப்பிடிப்பை துபாயில் நடத்த உள்ளதாகவும் அதன் பிறகு அதிரடி ஆக்சன் காட்சிகளை இந்தோனேசியாவில் படமாக்க இருப்பதாகவும் அதன் பின்னர் ஒரு சில காட்சிகளை மட்டும் இந்தியாவில் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமாக இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது . அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை ரம்யா குறித்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி.. நெருக்கமானவர் தகவல்..!

சிம்பு நடித்த  'குத்து' தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா திடீரென்று காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஒரே ஒரு மனுஷன்.. ஒரே ஒரு பாபா ரஜினி சார்.. 'ஜெயிலர்' வில்லன் விநாயகன் பேட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 600 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி.. ஆனால் ஜோதிகா அப்படியில்லை.. ராகவா லாரன்ஸ்..!

'சந்திரமுகி 2' படத்தில் கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் ஆனால் சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகியாக தன்னை நினைத்துக் கொண்டு  நடித்திருந்தார் என்று ராகவா லாரன்ஸ்

இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என 3 வருடங்களுக்கு முன்பே சொன்னேன்: 'சந்திரமுகி 2' நடிகை..!

இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என மூன்று வருடங்களுக்கு முன்பே நான் கூறியிருக்கிறேன் என்று 'சந்திரமுகி 2' படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கிறார்.

எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காண்பேன் என்று நினைக்கவில்லை: 'பாரத்' குறித்து கபிலன் வைரமுத்து

இந்தியா என்ற நம் நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து தனது கருத்தை கபிலன் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.