சுந்தர் சி படத்தில் இணைந்த 'பாகுபலி 2' கலைஞர்கள்

  • IndiaGlitz, [Saturday,July 02 2016]

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது பிரமாண்டமான படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தில் இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் நேற்று பார்த்தோம்.
இந்நிலையில் பாகுபலி 2' படத்தில் பணிபுரிந்து வரும் கலை இயக்குனர் சாபுசிரில் மற்றும் அதே படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளில் ஈடுபட்டு வரும் கமலக்கண்ணன் ஆகியோர் இந்த படத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. இருவரும் இந்த பிரமாண்டமான படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சுமார் ரூ.350 கோடியில் தயாராகும் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான இந்த படம் தமிழ், தெலுங், இந்தி மொழிகளில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நாயகன் வேடத்தில் இளையதளபதி விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு தனுஷ் தரும் பரிசு.

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' திரைப்படம் கிட்டத்தட்ட ரிலீஸ் தேதியை அறிவிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான 'கொடி' என்ற அரசியல் படமும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

'கபாலி' விநியோகிஸ்தரிடம் கவர்னர் கொடுத்த உறுதிமொழி

திரையுலகினர்களுக்கு எத்தனையோ பிரச்சனை இருந்தாலும் தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது திருட்டு டிவிடி பிரச்சனை.

என்னுடைய கேரக்டரில் மிகப்பெரிய டுவிஸ்ட். ஜாக்கி ஷெராப்

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகி வந்த 'மாயவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் 100வது படத்தில் ஆஸ்கார் நாயகன்?

கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 'ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்தின் 100வது படம் பாகுபலி', '2.0' படங்களுக்கு இணையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாகவும், இந்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

சியான் விக்ரமின் 'இருமுகன்' படத்தின் தெலுங்கு டைட்டில் இதுதான்

இர்னடு வித்தியாசமான வேடங்களில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'இருமுகன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் டீசர் வெளியானது.