close
Choose your channels

இயக்குனராகும் 'வேட்டையன்' வில்லன்.. சட்டம் படித்தவர் என்பதால் நீதிமன்ற கதை..!

Tuesday, October 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர், தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், இவர் சட்டம் படித்தவர் என்பதால் நீதிமன்றத்தை மையமாக கொண்ட ஒரு கதையை கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் உருவான ‘வேட்டையன்’ படத்தில், ரஜினியால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்படும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் சாபுமோன். இவர் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, டைட்டில் பட்டம் வென்றவர்.

‘வேட்டையன்’ படம் மூலம் தமிழ், மலையாள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது, இவர் இயக்குனராக இருப்பதாகவும், அடிப்படையில் சட்டம் படித்தவர் என்பதால், இவரது முதல் படம் நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட கதை சார்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் நாயகி மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் நடித்த பிரயாகா மார்ட்டின் என்பவர் நடிக்கவுள்ளார். பிரயாகாவின் நெருங்கிய குடும்ப நண்பர் தான் சாபுமோன் என்றும், ஒரு போதைப் பொருள் கடத்தல் பிரச்சினையில் பிரயாகா சிக்கியபோது, சாபுமோன் அவரை வெளியே கொண்டு வர உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment