சூர்யாவுக்காக மாதம் ஒருமுறை லண்டன் செல்லும் வெற்றிமாறன்.. இதுதான் காரணம்..!

  • IndiaGlitz, [Monday,September 04 2023]

சூர்யாவின் படத்திற்காக மாதம் ஒரு முறை இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்று வருவதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் அல்லது சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிப்பார் அல்லது ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகளின் பணிகள் லண்டனில் நடந்து வருவதாக கூறப்பட்டது.

’விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் இயக்குனர் வெற்றிமாறன் மாதம் ஒருமுறை லண்டன் சென்று ’வாடிவாசல்’ படத்தின் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகளை பார்வையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ’வாடிவாசல்’ படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் தயாராகி விடுவார் என்றும் அதேபோல் ’கங்குவா’ படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

More News

'ஜெயிலர்' மருமகளா இவர்? வித்தியாசமான காஸ்ட்யூமில் போட்டோஷூட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ரூ.600 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

41 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் பாரதிராஜா பட நடிகர்.. ஒரே படத்தில் சினிமாவில் இருந்து விலகியவர்..!

பாரதிராஜாவின் படத்தில் நடித்து அந்த படத்தோடு சினிமாவில் இருந்து விலகியவர் தற்போது 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரீஎண்ட்ரியாக காத்திருப்பதாக சமீபத்தில் அளித்து பேட்டியில் தெரிவித்துள்ளார். 

அப்பாஸ், கிரண் ரத்தோட், ஷகிலா. பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் முழு பட்டியல் இதோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

பிரபல இசையமைப்பாளர் கார் விபத்தில் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

கேரளாவிலிருந்து பிரபல இசையமைப்பாளர் தனது காரில் நண்பர்களுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அந்த கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இசையமைப்பாளர் மறைந்த துயர சம்பவம் பெரும்

5 வருடங்களுக்கு பின் தனுஷ் உடன் மீண்டும் இணைந்த பிரபல நடிகை.. இரவு பகலாக படப்பிடிப்பு..!

கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷின் படத்தில் நடித்த பிரபல நடிகை 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.